search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கொள்ளை"

    • சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரெயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது.
    • கொள்ளை தொடர்பாக ரெயிலில் வந்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 44 வயதான இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தொழில் விஷயமாக பெங்களூரு சென்றுவிட்டு ரெயிலில் சென்னை திரும்பினார்.

    தனது பையில் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து வந்தார்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளியை காணாமல் திடுக்கிட்டார். இது தொடர்பாக ரெயில்வே போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சதீஷ்குமார் பெங்களூரில் இருந்து புறப்பட்ட பிறகு ரெயிலில் அயர்ந்து தூங்கியதாக தெரிகிறது.

    இதனை பயன்படுத்தியே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அவர்கள் யார்? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ரெயிலில் வந்த வழித்தடங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • கடையில் இருந்த சர்க்கரை மற்றும் 20 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
    • கொள்ளை குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போரூர்:

    சென்னை கே.கே நகர் 4-வது செக்டார் 14-வது தெருவில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு அங்காடி செயல்பட்டு வருகிறது.

    நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரேசன் கடை ஊழியர் முனியம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் விரைந்து வந்து பார்த்தபோது கடையில் இருந்த சர்க்கரை மற்றும் 20 லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொள்ளை சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த உலகநாதன், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த குட்டி என்கிற சிவ விநாயகம் ஆகிய இருவரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • கொள்ளையடித்த நகைகளை விற்க உதவியாக இருந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நித்யா என்கிற கீதாவை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார் சுப்பிரமணியன் (வயது 61). மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

    இவர் கடந்த 21-ந் தேதி மனைவி லட்சுமியுடன் வடமாநிலங்களுக்கு சுற்றுலா சென்றார். இவரது மகன் புவனேஸ்வரன் வீட்டை பூட்டிவிட்டு தொழில் சம்மந்தமாக புனேவுக்கு புறப்பட்டு சென்றார். இதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் குமார் சுப்பிரமணியன் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் வைர நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

    கொள்ளையர்களை பிடிக்க கோயம்பேடு துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் கைவரிசை காட்டி கொள்ளையடித்து தப்பியது தெரியவந்தது. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த உலகநாதன், வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த குட்டி என்கிற சிவ விநாயகம் ஆகிய இருவரையும் நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளையடித்த நகைகளை விற்க உதவியாக இருந்த வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் நித்யா என்கிற கீதாவை போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    நகைகளை பறிமுதல் செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். உலகநாதன், சிவ விநாயகம் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளது.

    மேலும் சென்னையில் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு கொள்ளை வழக்கிலும் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • கொள்ளை குறித்து ராஜேஷ் கார்த்திக் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார்.
    • விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடிவருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலம் லேக் வியூ சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கார்த்திக் (வயது37) முந்திரி பருப்பு மொத்த வியாபாரி. இவர் தொழில் சம்மந்தமாக நேற்று முன்தினம் கடலூர் புறப்பட்டு சென்றார். இதையடுத்து ராஜேசின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ராஜேஷ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.80 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி சென்றுவிட்டனர். இன்று அதிகாலை சென்னை திரும்பிய ராஜேஷ் தனது வீட்டில் பணம், நகை கொள்ளை போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • கைதான சிவக்குமார் உள்பட 6 பேரும் மாதவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
    • அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொளத்தூர்:

    மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவர் கடந்த 25-ந் தேதி காலை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் நகையை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து கொளத்தூர் துணை கமிஷனர் ராஜாராம் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் ஆதிமூலம் மற்றும் மாதவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்பகுதிகளில் இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவகுமார், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபி ஆகியோர் நகைபறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அரும்பாக்கத்தை சேர்ந்த முகமது நியாஸ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற அப்துல்லா, கொடுங்கையூரை சேர்ந்த ஜமால், மாதவரத்தை சேர்ந்த சையத் இப்ராஹிம் ஆகியோரும் கூட்டாளிகளாக இருந்தது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கைதான சிவக்குமார் உள்பட 6 பேரும் மாதவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

    அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, 3 மோட்டார் சைக்கிள்கள், 40 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சென்னை:

    கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சசிகாந்த் ரெட்டி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சைலஜா ரெட்டி.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த மூன்று மாதங்களாக சென்னை அமைந்தகரை வெற்றி விநாயகர் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். மாலையில் திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10சவரன் நகை, லேப்டாப் மற்றும் 4ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×